கூடி ஆராய்ந்தது மாணவர் ஒன்றியம்!


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக முதற்கட்ட கலந்துரையாடல் சற்றுமுன் யாழ். மில்லேனியம் தங்குமிடத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கிருஸ்ணமீனன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது வட கிழக்கு சிவில் அமைப்புக்கள் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க உறுப்பினர்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் வேலையில்லா பட்டதாரிகள் மகளீர் சங்க உறுப்பினர்கள் மதகுருமார்கள் பத்திரிகையாளர்கள் அடங்களாக பலரும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது எதிர்வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக நிகழ்ச்சி நிரல்கள் சம்மந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
+

No comments