ஈழ எழுச்சி பாடல்களுடன் மேதினமாம்?



நல்லாட்சி அரசின் பங்காளிகளுள் ஒரு தரப்பான ஜே.வி.பியின் மே தின பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவருகின்றது.அவ்வகையில் அரசின் மற்றொரு பங்காளி கட்சியான  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
ஜே.வி.பியின் மே தின பேரணி யாழ்.சென் பொஸ்கோ பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகி யாழ்.நகரில் பொதுக்கூட்டத்துடன் முடிவடையவுள்ளது. அப்பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்டபோதும் வேறு எந்தவொரு கட்சி சார்பு பிரதிநிதிகளும் பங்கெடுத்திருக்கவில்லை.

முற்றுமுழுதாக தெற்கிலிருந்து வாகனங்கள் மூலம் தருவிக்கப்பட்ட சிங்கள ஆதரவாளர்கள் சகிதம் ஜேவிபியின் பேரணி,மற்றும் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதேவேளை யாழப்பாணத்தில் கிட்டு பூங்காவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினதும் கரவெட்டியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினதும் மேதினங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி நெல்லியடி புதிய சந்தைப் பகுதியிலிருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சிக் பாடல்களுடன் ஆரம்பமாகிய பேரணியில் பெரும் திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.

No comments