வெள்ளநீரில் சிக்கிய காவல்துறை உறுப்பினர் சடலமாக மீட்பு

மாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த காவல்துறை உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 29 வயதுடைய மாதம்பே காவல் நிலையத்தில் சேவையாற்றும் காவல்துறைக் காண்ஸ்டபிளான (88587 ) தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments