தூத்துக்குடி அரச மருத்துவமனை முன் போராடிய மக்கள்! அடித்துக் கலைத்தது காவல்துறை!

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பாக உறவுகளை பறிகொடுத்தவர்களுடன் பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர், எஸ்பியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. ஆனால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை காரணம் காட்டி போலீசார் பொதுமக்களை தடியடி நடத்தி வெளியேற்றினர். அப்போது போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

No comments