தூத்துக்குடிக்கு நீதி கோரி கிளியில் ஆர்ப்பாட்டம்!


தூத்துக்குடி படுகொலையை கண்டித்து இன்று கிளிநொச்சியில் வடகிழக்கு புரட்சிகர இளையோர் பேரவை  என்ற அமைப்பு போராட்டம் ஒன்றை  இன்று முன்னெடுத்திருந்தது.
இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பஸ் நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தூத்துக்குடி பகுதியில் உயிரிழந்த மக்களின் நினைவாக மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பல்வேறு பதாதைகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments