உலகின் புகழ்பெற்ற கண்ணாடி மாளிகளை மீண்டும் திறப்பு!

உலகின் புகழ் பெற்ற விக்டோரியா கண்ணாடி மாளிகை இங்கிலாந்து நாட்டில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து லண்டன் கியூ பகுதியல் அமைந்துள்ள இக்கண்ணாடி மாளிகை (தாவரவியல் பூங்கா) 1863 ஆண்டு அதாவது 18ஆம் நூற்றாண்டு உருவாக்கப்பட்டது.

இந்த தாவரவியல் பூங்காவில் உலகின் பல பகுதியில் உள்ள தாவரங்கள் இங்கே வளர்க்கப்படுகின்றன. பல ஆண்டுகள் இத் தாவரவியல் பூங்கா பல்வேறு வகையான பாதிப்புக்களுக்க உள்ளாகிய நிலையில் கண்ணாடிள் சேதமடைந்திருந்தன. இந்நிலையில் குறித்த கண்ணாடி மாளிகையை சீரமைப்பதற்காக கடந்த 5 ஆண்டுகள் பூட்டப்பட்டிருந்தது. புதிய பொலிவுடன் திருத்த வேலைகளுக்காக 57 அமொிக்க மில்லியன் டொலர்கள் செலவளிக்கப்பட்டு குறித்த பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லுகின்ற இந்த இடத்தை 2003 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அங்கீகரித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments