வவுனியாவில் 8 மாதக் குழந்தையைக் கடத்தியது வெள்ளை வான் குழு!

வவுனியாவில் 8 மாதங்களான ஆண்குழந்தையொன்று வெள்ளை வானில் வந்த குழுவினால் கடத்திச் செல்லப்பட்டது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வவுனியா குட்செட் வீதி 1 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை 2 மணியளவில்  புகுந்த குழு, தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண் குழந்தையைக் கடத்திச் சென்றனர்.

வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவே குழந்தையைக் கடத்திச் சென்றது என்று தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையில் தந்தை வெளிநாடில் வாழ்கின்றார் எனவும் குழந்தையின் தந்தை, தாய் கருத்து வேறுபாடால் பிரிந்து தனித்தனியே வாழ்கின்றனர்.

இதனையறிந்து குறித்த குழந்தையக் கடத்தப்போவதாக முன்னரே எச்சரிக்கப்பட்டதாக தாய் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தை கடத்தல் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments