காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 உயர்வு!

கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்ட நிலையில் காஸா எல்லைப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் பேர் குவிந்து உச்சகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கம்பி வேலியை வெட்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதால் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இஸ்ரேல் படைகள் நடத்திய இந்த வன்முறைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. 1,204 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 116 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments