522 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவத்துக்கு 866.71 மில்லியன் ரூபா! - அமைச்சரவை அனுமதி


வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள, தனியாருக்குச் சொந்தமான 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது. போரால் பாதிக்கப்பட்ட தனியார் காணிகளை விடுவிக்கும் போது அவற்றில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் வேறு இடத்தில் மீள அமைக்கப்படவுள்ளன. அவற்றை அமைப்பதற்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள 866.71 மில்லியன் ரூபாவை இலங்கை இராணுவத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments