பாடசாலைகளிலும் மே18 நினைவேந்தல்! அரைக் கம்பத்தில் பறக்கிறது வடமாகாணசபைக் கொடி!

வடக்கு மாகா­ணத்­தின் அனைத்­துப் பாட­சா­லை­க­ளும் நாளை வெள்ளிக்கி­ழமை, வடக்கு மாகாண சபை­யின் கொடி­யை அரைக் கம்பத்தில் பறக்­க­வி­டு­மா­றும் அன்று காலை பதி­னொரு மணிக்கு அனைத்து பாட­சா­லை­க­ளி­லும் அனை­வ­ரும் அக­வ­ணக்­கம் செலுத்துமாறும் அனைத்து அதி­பர்­க­ளை­யும் கேட்­டுக்­கொள் வ­தாக, வடக்குமாகாண கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரிவிக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கடந்த 70ஆண்­டு­கால எமது தேசிய இனத்­தின் உரி­மை­களை வென்றெடுப்­ப­தற்­காக அகிம்சை வழி­யி­லும் பின்­னர் ஆயுத ரீதி­யி­லும் நாம் போராடி வந்­துள்­ளோம். எமது ஆயு­தப் போராட்­டம் பயங்­க­ர­வா­த­மா­கச் சித்­தி­ரிக்­கப்­பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி பன்னாட்டுச் சமூ­கத்­தைப் பிழை­யாக வழி­ந­டத்தி மௌனிக்­கச் செய்யப்பட்­டது.

கடந்த முப்­ப­தாண்டு போராட்­டத்­தில் நாம் ஏரா­ள­மான இளை­யோர் உள்ளிட்ட லட்­சக்­க­ணக்­கான உயிர்­களை களப்­பலி கொடுத்­துள்­ளோம். இறு­தி­யாக எம்­மக்­கள்­மீது நடை­பெற்ற தாக்­கு­த­லில் பல்லாயிரக்கணக்கான உயிர்­களை இழந்­துள்­ள­து­டன் பல்­லா­யி­ரக் கணக்­க­னக்­கா­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை அறிந்­து­கொள்ள முடி­யாத நிலை­யில் உள்­ளோம்.

எமது இனத்­தின் உரி­மைக் குர­லுக்­கான போராட்­டம் இன்­ன­மும் முற்றுப்­பெ­ற­வில்லை என்­ப­தை­யும், மடிந்­து­போன எமது உற­வு­க­ளுக்­கும் காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வு­க­ளுக்­கும் இன்­ன­மும் நீதி வழங்கப்படவில்லை என்­ப­தை­யும் பன்­னாட்­டுச் சமூ­கத்­திற்கு அழுத்­த­மாக எடுத்­து­ரைக்க வேண்­டி­யுள்­ளது.

எமது உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான வேள்­வி­யில் ஆகுதியானவர்களை உணர்­வு­டன் நினை­வு­கூர வேண்­டி­யது எம்­மி­னத்­தின் கட­மை­யா­கும் எனக் கூறப்பட்டுள்ளது.

No comments