மழையுடனான காலநிலையில் தற்காலிக மாற்றம்


நிலவும மழையுடனான காலநிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

எவ்வாறாயினும், மேல் , சப்ரகமுவ , மத்திய , வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் போன்று காலி , மாத்தறை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது

No comments