மோடி விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமானநிலையம் அருகே கறுப்பு பலூன்கள் பறக்கவிட்டு போராட்டம்
காலை 8.45 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பிய மோடி இன்னும் சற்று நேரத்தில் சென்னை விமான நிலையம் வந்தடைய இருக்கிறார். விமான நிலையம் அருகே உள்ள பரங்கிமலையில் இருந்து கறுப்பு பலூன்களை பறக்கவிடும் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். வேல்முருகன் தலைமையிலான இப்போராட்டத்தின்போது கறுப்பு பலன்கள் பறக்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Post a Comment