முல்லைத்தீவில் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயம்


முல்லைத்தீவு – குமுழமுனை பிரதேசத்தில் நேற்று இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாக முல்லைத்தீவு காவல்துறை தெரிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தின் பின்னர் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஐந்து பேரும், முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்து.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே மோதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முல்லைத்தீவு காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments