பிரித்தானியாவின் உள்துறை அமைச்சராக பாகிஸ்தான் வம்சாவளியான சஜித் ஜாவித் நியமனம்!

பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சரா (Home Secretary) பாகிஸ்தான் வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் ஜாவித் (Sajid Javid) பிரித்தானியப் பிரதமர் தெரசா மே நியமித்துள்ளார். விரைவில் அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் முழுவதும் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன் தீவுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அங்கேயே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.

சமீபத்தில் கரீபியன் தீவுகளில் இருந்து வந்து குடியேறியவர்களில் பலருக்கு பிரிட்டனில் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சில திட்டங்கள் மறுக்கப்பட்டது. பிரிட்டனில் வாழ்வதற்கு உரிய ஆவணங்களை அவர்கள் வைத்திருக்காவிடில் மீண்டும் நாடுகடத்தப்படுவார் என அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.

நீண்ட நாள் பிரிட்டன் வாசிகளை சட்டவிரோத குடியேறிகள் என அடையாளப்படுத்தப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை அடுத்து, உள்துறை மந்திரி ஆம்பர் ரூத் (Amber Rudd) பதவி விலக வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.

அதிக அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக ஆம்பர் ரூத் (Amber Rudd) தனது பதவி விலகலைச் செய்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தமை இங்கே நினைவூர்ட்டத்தக்கது.

No comments