வறட்சியால் மின்சார உற்பத்தியில் சிக்கல்


நிலவும் வறட்சி காரணமாக, தனியார் மின் உற்பத்தி ஆலைகளில் இருந்து மின்சாரத்தை விலைக்கு பெற்று கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் வலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பெற்று கொள்ளப்படும் ஒரு மெகாவொல்ட் மின்சாரத்திற்கு 23 ரூபாவில் இருந்து 25 ரூபா வரையில் பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments