ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது இருந்த அளப்பெரிய மரியாதையின் காரணமாகவே,தனது மூத்த மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தார் நடிகர் விஜயகாந்த்.

இவ்வாறு நடிகர் சத்தியராஜ் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான விஜயகாந்தின் நாற்பதாவது சினிமா நிறைவு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நடிகர் சத்தியராஜ் இவ்வாறு தெரிவித்தார்.

ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த போது பெரியார் திடலில் நாடக நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நடிகர் விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்ததார். மணிவண்ணனால் எழுதி அரங்கேற்றப்பட்ட குறித்த நாடக நிகழ்வு ஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலிக்கு முகமாக நடத்தப்பட்டது.

அதில் விஜயகாந்தின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. இறுக்கமான அந்த காலத்தில் விஜயகாந்த் தனது மகனுக்கு பிரபாகரன் என்ற பெயரை வைத்தமையானது அவரது துணிவைக் காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments