கண்ணீர் அஞ்சலி - நாதன் தேவராஜ்

தேசிய செயற்பாட்டாளர் - தமிழ்த்
தேசத்தின் பற்றாளர்  குட்டி..
குட்டியின் மகனாய் புலிக்குட்டியாய் பிறந்த நாதன்
இம்மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்
ஆறாத்துயரில் அழுகின்றோம்....

தேவராஜ் ஈன்றெடுத்தப்
பிள்ளையை
புற்றுநோய்ப் பேய்
பற்று வைத்துப் பிடித்ததை
எண்ணி.. எண்ணி அழுகிறோம்

நாதா...நாதா...சாவை காணும்
வயதில்லை உனக்கு...
சாவே..சாவே...நாதனை கொன்றாய் எதற்கு....

புலம்பெயர் தேசத்தில்
புலிபோல் பிறந்து
இப் பூமியை விட்டு பிரிந்தாய்
விண்வெளியில் ஒளியாய் தெரிந்தாய்

உன் நீங்காத நினைவை
நித்தம் நினைப்போம்... எம்
தூங்காத ஈழக் கனவுக்கு
இரத்தம் கொடுப்போம்

இறந்தாலும்
இரவாது உன்  நினைவு
மறந்தாலும்
மடியாது உன் உறவு

-செயற்பாட்டாளர்கள்-

No comments