ஆளுநரது ஆதரவாளர் சந்திப்பு!


வடமாகாண ஆளுநர் குரேயின் தீவிர ஆதரவாளரும்; யாழ் மாநகர முதல்வருமான ஆனோல்ட் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இன்று (18) முற்பகல் 10.30 மணியளவில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பின்போது யாழ் மாநகரத்தினை அழகு படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகரக அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதற்கு வேண்டிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் மத்திய அரசின் உதவியினை பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தேவை ஏற்படின் கோரிக்கையினை முன்வைக்குமாறும் மாநகர முதல்வர்; ஆனோல்டை ஆளுநர் கேட்டுக்கொண்டதாகவும் தெரியவருகின்றது.
ஆனோல்ட் ஆளுநரது தீவிர விசுவாசியாக இருந்து வந்ததுடன் அவரிற்கு ஆதரவாக சுவரொட்டிகளை வெளியிடுவதிலும் முன்னின்றி செயற்பட்டு வந்திருந்த ஒருவராவார்.
ஆளுநரது சகோதரனின் மரணத்திற்கு ஆனோல்ட் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி முக்கியமானது.

No comments