இரணை தீவை விட்டு வெளியேற மாட்டோம் - போராடும் மக்கள்
எமது நிலம் விடுவிக்கப்படும் என்ற அரசியல் தலைவர்கள், அதிகாரிகளின் வாக்குறுதிகள் பயனற்றுப் போய், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்தும் பயனில்லாத நிலையில் நாங்களாக முடிவெடுத்து யாருடைய துணையும் இன்றி படகுகளில் வந்து தங்கியுள்ளோம்.
இங்கு 26 ஆண்டுகளின் பின்னர் சமைத்து உண்கிறோம். இனி இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்று கிளிநொச்சி இரணை தீவு மக்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சி ‘இரணை தீவு’ மக்கள் தங்களைச் சொந்த மண்ணில்
மீள்குடியமர்த்துமாறு கடந்த திங் கட் கிழமை காலை 50 படகுகளில் வெள்ளைக் கொடிகளுடன் இரணைதீவுக்குச் சென்றனர்.
காலை 10.30 மணிக்கு அங்குள்ள தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மீள்குடியமர்த்துமாறு கடந்த திங் கட் கிழமை காலை 50 படகுகளில் வெள்ளைக் கொடிகளுடன் இரணைதீவுக்குச் சென்றனர்.
காலை 10.30 மணிக்கு அங்குள்ள தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தமது சொந்த மண்ணில் மீள்குடியமர்த்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்தனர். எனினும் அந்த மக்களுடன் பேச்சில் ஈடுபட்ட அங்கு நிலைகொண் டுள்ள கடற்படையினர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளாத மக்கள் தமது கிராமத்தில் உள்ள கோயிலுக்கு அருகாமையில் போராட்டத்தை மேற்கொண்டனர். தீர்வு கிடைக்காத நிலையில் இரணைதீவு கிராமத்தில் தங்கி நின்று போராட்டங்களை முன்னெடுப்பதாக அந்த மக்கள் முடிவு செய்தனர்.
மாவட்டச் செயலர், மற்றும் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள அதிகாரிகள் தமது போராட்ட இடத்துக்கு வந்து மீள்குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தாலே அன்றி தாம் அந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அந்த மக்களுடன் பங்குத் தந்தையர்களும் இணைந்து கொண்டனர்.
ஒரு சில அரசியல் தலைவர்களைத் தவிர எவரும் மக்களுடைய கோரிக்கைக்கு செவிசாய்க்கவே இல்லை. இந்த நிலையிலேயே மக்கள் இரணை தீவைவிட்டு வெளியேறாது அங்கேயே தங்குவதாக முடிவு செய்துள்ளனர்.
‘‘இரணை தீவில் உள்ள ஆலயத்துக்கு முன்பாக மக்கள் சமைத்து உண்கின்றனர். பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அங்கு அதிகமாக தங்கியுள்ளனர். அவர்கள் அங்கு அட்டை, மட்டித் தொழில்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். பாடசாலைகள் ஆரம்பித்துள்ளதால் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக சிலர் அங்கிருந்து சென்றுள்ளனர். ஏனையவர்கள் 26 ஆண்டுகளின் பின்னர் இரணைதீவில் வாழத் தொடங்கியுள்ளனர் இனி இந்த இடத்தை விட்டு எந்தக் காணரம் கொண்டும் நகரப்போவதில்லை. எம்மை வந்து சந்தித்து எமக்கான பதில்களைக் கூறாத அதிகாரிகள் தான் இதற்கு முழுப் பொறுப்புடையவர்களாவர். கடற்படையினருக்கு உள்ள இரக்கம் கூட அவர்களுக்கு இல்லை என்றே கூறவேண்டும். உரிய தரப்புகளுடன் பேசுங்கள் என்று கடற்படையினர் கூறிய பின்னரும் அவர்கள் வாயை மூடியிருப்பது வேதனை தருகிறது’’ என்று போராடும் மக்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சி இரணைதீவு கிராம மக்கள் 1992ஆம் ஆண்டு தமது சொந்த மண்ணில் இருந்து இடம் பெயர்ந்து சென்று முழங்காவில் கிராமத்தில் உள்ள ‘இரணை மாதா’ கிராமத்தில் குடியேறினர்.
சுமார் 183 குடும்பங்கள் கடந்த 26 வருடங்களுக்கு முன் இடம் பெயர்ந்துள்ள நிலையில் தற்போது 400 குடும்பங்களுக்கு மேலாக தமது சொந்த இடத்தை விட்டு நிர்க்கதி யான நிலையில் முழங்காவிலில் உள்ள ‘இரணை மாதா’ கிராமத்தில் வாழ்ந்து வருகின்றன.
தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக தமது போராட்டத்தை தொடர்ந்த மக்கள் கடந்த வருடம் தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்தநிலையில் அண்மையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதுதொடர்பாக கூட்டம் ஒன்றைக் கூட்டி ஆலோசனை செய்திருந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அவர்களின் சொந்த இடத்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஆரம்பக் கட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளு மாறும் அவர் அதிகாரிகளைப் பணித்திருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது.
Post a Comment