எச்சரிக்கை:வவுனியாவில் சத்தியலிங்கத்தின் போலிகள்!

முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனிற்கு எதிராக சேறுபூசலில் ஈடுபட்ட நபரொருவரினை வவுனியா வர்த்தக சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

வவுனியா வர்த்தக சங்கத்தின் முன்னால் தலைவர் என தன்னை குறிப்பிட்டுள்ள குறித்த நபர் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் இரண்டாவது தடவையாக முதல்வராவது வவுனியா மாவட்ட வர்த்தகர்களுக்கு விருப்பமில்லை என இரசரத்தினம் கிரிதரன் என்பவர்  ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்திருந்தார்.


இதனால் சர்சைக்குள்ளான வவுனியா வர்த்தக சங்கம் உடனடியாக கூடி மறுப்பறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது. 

குறித்த மறுப்பறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது இராசத்தினம் கிரிதரன் என்பவர் தவறான பதவிநிலையை குறிப்பிட்டு தன்னிச்சையாக முடிவெடுத்து ஊடகங்களுக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிரான கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். எனவே இந்த தகவலுக்கும் எமது வர்த்தக சங்கத்திற்கும் எதுவிதமான தொடர்பும் இல்லையென்பதையும் கிரிதரன் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று வவுனியா வர்த்தக சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments