நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது ஒருபோதும் சரியானதாக அமையாது


அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம், அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது ஒருபோதும் சரியானதாக அமையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், நாடாளுமன்றத்தைக் கலைத்தால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அதற்கு ஆதரவளிக்க இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டால், தேசிய சுதந்திர முன்னணி அதனை எதிர்க்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments