இலங்கை மீன்வளர்ப்பு சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம்


நோய் தொற்று நிறைந்த இரால் வகை யொன்றை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் வானூர்தித் தளத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
 
இலங்கை மீன்வளர்ப்பு சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
 
தனியார் நிறுவனம் ஒன்றினால் இந்த இரால் வகை இறக்குமதிசெய்யப்படவுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
 
மீன்வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசகையினால் இதற்கான அனுமதியும் வழங்கப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது

No comments