வீதிகள் மூடப்பட்டுள்ளமையால் வலி.வடக்கில் காணிகளுக்கு செல்லமுடியாத நிலை!


Sajeevan வீதிகள் மூடப்பட்டுள்ளமையால் வலி.வடக்கில் காணிகளுக்கு செல்லமுடியாத நிலை! வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வீதிகளை இராணுவத்தினர் மூடியுள்ளமையால் குறித்த பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக வலி. வடக்கு மீள் குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “வலி. வடக்கில் கடந்த 27 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 680 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த வாரம் மீள உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆவளை சந்தியிலிருந்து மயிலிட்டி கிராமக்கோட்டடிசந்தி வரையிலான வீதி இன்னமும் இராணுவ கட்டுப்பாடிற்குள் உள்ளது. இவ்வீதிக்கு குறுக்காக இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைப்பது போன்ற முள் வேலிகளை அமைத்து பொதுமக்கள் பாவிக்க முடியாத வகையில் மூடியுள்ளனர். அதனால் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் மக்கள் அங்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.

No comments