புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டவர் கைது


வாகரை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இன்று தெரிவான கே.கோணலிங்கம் வாகரை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வாகரை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments