கறுப்பு ஆடு போராட்டத்திற்குள் புகுந்து கல் எறிந்துவிட்டது - பாரதிராஜா

கறுப்பு ஆடு போராட்டத்திற்குள் புகுந்து கல் எறிந்துவிட்டது என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார். நாங்கள் துக்கத்தில், துயரத்தில் இருக்கும்போது ஐபிஎல் கேளிக்கை ஆட்டம் தேவையா என கேட்கத்தான் நாங்கள் பேரணி வந்தோம். அப்போது எங்கோ சில உணர்வு மீறல்கள் நடந்திருக்கலாம். அதை புரிந்துகொள்ள வேண்டும்.

கூட்டத்தில் கறுப்பு ஆடு நுழைந்து கல் எறிந்து விட்டது. போராட்டத்தை திசை திருப்புவது அவர்கள் நோக்கம். போராடும் தமிழர்கள் இதை செய்யவில்லை. போலீஸ் தடியடிக்கு நீதி கேட்காமல் போக மாட்டோம். போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நாங்கள் பேச உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் இல்லை, காவிரிக்கு ஆதரவான போராட்டம் என்று போராட்டத்தில் பங்கேற்ற வைரமுத்து தெரிவித்தார்.

விவசாயம்தான் தமிழர்களின் ஆதி தொழில் என்றும், அதை மீட்டெடுக்காமல் தமிழர்கள் ஓய மாட்டார்கள் என்றும், வைரமுத்து தெரிவித்தார்.

திரைப்பட இயக்குநர்கள் போராட்டத்தால் அண்ணாசாலையே போர்க்களமானது.

No comments