தென்னிலங்கைக்கு விற்கவில்லை: ஆனோல்ட்


யாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்கப்போவதில்லையென புதிய மாநக ரமுதல்வர் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் தனது அலுவலகத்தில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பியின் உதவியுடன் ஆட்சியை பிடித்ததுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரின் தெருக்களை  கூட்டுவதற்கு தென்னிலங்கை தனியார் சுத்திகரிப்பு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இவ்விடயம் தொழிலாளர்கள் மட்டத்தில் கடும் அதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது.
இதனையடுத்து இன்று அவசர பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தியுள்ள அனோல்ட் அவ்வாறு தென்னிலங்கை தரப்புக்களிற்கு சுத்திகரிப்பு சேவையினை வழங்கப்போவதாக வெளியான தகவல்களை மறுதலித்துள்ளார்.

No comments