சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏவுகணைத் தாக்குதல்!

சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதலை நடத்துகின்றன என டிரம்ப் அறிவித்துள்ளார். ஆஸாதின் அரசாங்கம் இரசாயன ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தும் வரை இந்த ஏவுகணைத் தாக்குதல் தொடரும் என அமெரிக்க டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் அறிவியல் ஆய்வு மையம் மற்றும் பல்வேறு சிரிய ராணுவ தளங்களும் இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளாகியுள்ளன.

நேற்று (13) வெள்ளிக்கிழமை இரவும், இன்று (14) அதிகாலையிலும் மேற்கொண்ட ஏவுகணை மழையாகப் பொழிந்தன.

அமொிக்கா தலைமையிலான மேற்ற கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு ஈரான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

No comments