மகாவலி எல் வலயம்:முன்னரே பேசிவிட்டேனே:சுமந்திரன்!



வடக்கிற்கு தண்ணீர் தேவை.அதனை தாருங்கள் ,விவசாயம் செய்ய நிலமும் ஆட்களும் போதிய அளவில் இருப்பதாக நல்லாட்சி அரசிற்கு சொல்லிருப்பதாக தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் தனது வீட்டிற்கு ஊடகவியலாளர்களை இன்று வியாழக்கிழமை அழைத்துப்பேசிய அவர் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் தான் இது பற்றி நாடாளுமன்றில் பேசிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மகாவலி நில பிடிப்பு விவகாரம் தற்போதைய ஆட்சிக்கால விடயமல்ல.முன்னரும் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.
தற்போதைய அரசிடம் தண்ணீர் தேவை.அதனை தாருங்கள் ,விவசாயம் செய்ய நிலமும் ஆட்களும் போதிய அளவில் எங்களிடமிருப்பதாக இருப்பதாக எடுத்துச்சொல்லியிருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே இப்பத்திரிகையாளர் சந்திப்பில்; தமிழரசுக்கட்சியின் செயலாளர் கே.துரைராஜசிங்கமும் பிரச்சன்னமாகியிருந்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரான அவர் மகாவலி திட்டத்தின் கீழ் இடம்பெற்ற நிலசுவீகரிப்பு விடயத்தை பற்றி அலட்டிக்கொள்ளாதிருந்து வந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments