சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடுகிறது


ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இதன்போது , நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திர கட்சியின் அமைச்சர்களுடன் தொடர்ந்தும் செயற்பட முடியாது என ஐக்கிய தெசிய கட்சி ஜனாதிபதிக்கு விடுத்த அறிவிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்

No comments