இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் 4 பாலஸ்தீனியர்கள் பலி!


 பாலஸ்தீன போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 700 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை காசா எல்லையோரத்தில் உள்ள தடுப்பு வேலியின் அருகே 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு கம்பி வேலியை வெட்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்ற போதே இஸ்ரேலிய இராணுவத்தினரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தின் போதே 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 700 பேர் காயமடைந்துள்ளனர்.

No comments