மீனவர்களுக்கிடையில் மோதல் - 3 பேர் காயம்!


முல்­லைத்­தீவு, சாலைப் பகு­தி­யில் அதி­காலை 1.30 மணி­ய­ளவில் மீன­வர்­க­ளுக்கு இடை­யில் நடந்த மோத­லில் 3 பேர் காயமடைந்தனர். வெளி­மா­வட்­டங்­க­ளில் இருந்து வந்து தொழில் செய்­யும் மீன­வர்­களே மோதிக்­கொண்­ட­னர் என்று உள்­ளுர் மீன­வர்­கள் தெரி­வித்­த­னர். மன்­னார் வங்­கா­லை­யைச் சேர்ந்த செ.மரி­ய­நா­ய­கம் (வயது-26), கி.டார்­வின் (வயது-35), ஆ.றுயான் (வயது-29) ஆகி­யோரே காயங்­க­ளு­டன் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். சம்­ப­வம் தொடர்­பில் முல்­லைத்­தீ­வுப் பொலி­ஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலி­ஸார் சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் இரு­வ­ரைக் கைது செய்­துள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

No comments