ஏமனில் வான் தாக்குதல்! திருமண நிகழ்வில் மணமகள் உட்பட 20 பேர் பலி!

ஏமன் வடமேற்கு பகுதியில் இன்று சவூதி கூட்டுப்படையினர் ஹவுத்தி குழுவினரை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலில் அங்குள்ள கிராமம் ஒன்றில் திருமண நிகழ்ச்சியில் மணமகள் உட்பட கலந்து கொண்ட 20 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

No comments