மின்னல் தாக்கியதில் 14 பேர் பலி!

பங்களாதேஷில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) பிற்பகல் மின்னல் தாக்கியதில் 14 பேர் உடல் கருகிப் பலியாகியதோடு மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளும் உள்ளடக்கப்படுகின்றனர் என மருத்துவமனையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

மின்னல் தாக்கிய உயிரிழந்த சம்பவம் பங்களாதேஷ் நாட்டின் 7 மாவட்டங்களில் நடத்துள்ளது. குறிப்பாக சிராஜ்கஞ்ச், சுனம்கஞ்ச், மகுரா, நோகாலி மற்றும் ரங்கமதி மாவட்டங்களில் வயலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீதே மின்னல் தாக்கியுள்ளது.

No comments