14 இராணுவ வீரர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதி


மன்னார் - பொம்பெமடு இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 14 வீரர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலவிய கடும் வெயிலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் திடீரென மயக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து குறித்த வீரர்கள் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் , குறித்த பயிற்சி வீரர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வவுனியா மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

No comments