தெலுங்கானாவில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு


தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 12 விவசாயத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். நல்கொண்டா அருகே பெப்பிலியில் இருந்து விவசாய வேலைக்காக 30 தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற டிராக்டர் ஓட்டுநரின் கட்டுபாட்டினை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
டிராக்டர் கால்வாயில் முழ்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தண்ணீரில் விழுந்த சில பேர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். தண்ணீரில் அடித்து சென்றபேர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த 12 பேர்களின் உடலையும் பிரத பரிசோதனைக்காக நல்கொண்டா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த சிலரை நல்கொண்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments