ரூபா 10 கோடி பண மோசடி! 60 வயது பெண் கைது!

இலங்கையின் பிரதான காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து , பொது மக்களிடம் பண மோசடி செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் காவல்துறையின் மோசடி விசாரணைப் பிரிவால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பெண் ஏப்ரல் 11 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 60 வயதான ஐராங்கணி மல்லிகா பெர்னாண்டோ  எனத் தெரியவந்துள்ளது. குறித்த நபர் ஏப்ரல் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பணம் முதலீடு செய்யும் போது அதிக வட்டி வழங்குவதாக கூறி குறித்த பெண் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

No comments