உள்ளாட்சி மன்ற தேர்தலின் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை


உள்ளாட்சி மன்றத் தேர்தல்களின் ஊடாக அடையாளம் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெப்பரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த திருத்தங்களை மேற்கொள்ளும்போது உரிய கால எல்லைக்கு அமைய செயற்படாவிட்டால், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் திகதி நிர்ணயம் இன்றி பிற்போடப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனவே, கால எல்லை தொடர்பில் கொள்கை பகுப்பாய்வாளர்களின் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments